கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் லொறி குடைசாய்ந்து விபத்து

க.கிஷாந்தன்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை கலுகல பகுதியில் பொலித்தீன் மற்றும் காட்போர்ட் வகைகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 16.01.2017 அன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அட்டன் – நோர்வூட் பகுதியிலிருந்து அவிசாவளை நோக்கி பயணிக்கும் போது வாகனத்தின் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகனத்தின் சாரதியும் மேலும் இருவரும் பயணித்துள்ளதாகவும் இதில் சாரதி படுங்காயகளுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.