தாருஸ்ஸலாமின் மூடு மந்திரம் பற்றி முந்திக் கொண்ட LANKA FRONT NEWS


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான ” தாருஸ்ஸலாத்தின் மறைக்கப்பட்ட மர்மங்கள் ” என்ற தலைப்பில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது .

எமது லங்கா புரண்ட் இணையத்தளத்தில் 15.04.2016 ல் ” தாறுஸ்ஸலாமின் முடிச்சு அவிழ்க்கப்படுமா? முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்குப் பகிரங்க மடல் ” என்ற தலைப்பில் முதன் முதலாக கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம் .

நாங்கள் ஆரம்பித்து வைத்த விடயங்கள் இன்று பூதாகரமாகி இருப்பதை முன்னிட்டு லங்கா புரண்ட் இணையத்தளம் பெருமை கொள்கின்றது (உண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம் ).

நூலின் நம்பகத்தன்மையை வலியுறுத்துவதற்காக பின் இணைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன , மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் பொறுப்பு தாருஸ்ஸலாத்தின் சட்டையை அணிந்து கொண்டிருக்கும் முகமூடிகளின் பொறுப்பாகும் .

உள்ளக மோசடிக்காரர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் அடையாளம் கண்டுகொள்வதற்கு மிகப் பொருத்தமான சந்தர்ப்பம் ஒன்று கருவூட்டலாகி உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் .

சுருட்டல்காரர்களின் அடுப்பில் வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக நிலைமை மாறியுள்ளது.