மறைந்த முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவின் அடிவருடியாக ஜனாதிபதி மைத்திரி :துமிந்த திஸாநாயக்க

மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சிக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் 118 ஆவது ஜனன தின நிகழ்வு காலிமுகத்திடலில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,

அமரர் பண்டாரநாயக்க, கட்சிக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் வெற்றியைப் பெற்றுத்தந்தவர்.

தமது வாழ்க்கையிலும் பார்க்க நாட்டிற்கும் பொதுமக்களுக்குமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.

கிராம மக்களை சமுதாயத்தில் உயர்மட்டத்திற்கு கொண்டுவருவதற்கு பண்டாரநாயக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

அவரது கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி கட்சிக்கும் நாட்டிற்கும் சேவையாற்றுவதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.