2020 ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது :அமைச்சர் நிமல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்து போட்டியிட்டாலும் தேசிய அரசாங்கத்திற்கு அது அச்சுறுத்தலாக அமையாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பல்வேறு தரப்பினர் அடிப்படையற்ற கருத்துக்களை வெளியிட்டாலும் 2020 ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரு பக்கம் இருந்து பேச போவதால் அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்படாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சவாலான காலத்தை எதிர்நோக்கியிருந்தாலும் சிலர் கூறுவது போல் சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்படவில்லை.

எனினும் தற்போதைய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது சவரக்கத்தில் தயிர் சாப்பிடுவது போன்ற வேலை எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.