திடீரென ஏற்பட்ட தீயினால் நான்கு கடைகள் சேதம் !

க.கிஷாந்தன்

மஸ்கெலியா பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட கவரவில கொலனி பகுதியிலுள்ள திடிரென ஏற்பட்ட தீயினால் நான்கு கடைகள் சேதமடைந்துள்ளதாக மஸ்கொலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தீ 02.01.2017. அன்று மாலை 7.00 அணியளவில் ஏற்பட்டுள்ளது. இத்தீயினால் பலசரக்கு கடை, தையல் நிலையம் ஆகிய களஞ்சியசாலை, ஒன்று மூடியிருந்த கடையொன்றும் தீக்கிரையாகியுள்ளன.

 

இத்தீ முதலில் பலசரக்கு கடையிலிருந்து ஏற்பட்டதாகவும் அதனை தொடர்நது ஏனைய கடைகளுக்கு பரவியதாகவும் நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகளினதும் பொலிஸாரினதும் பாரிய பிரயத்தனத்தின் பின் இரண்டு மணித்தியால முயற்சியின் பின் சுமார் 8.30 மணியளவில் தீ முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தீ மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தீயினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் எவ்வளவு என இதுவரை மதிப்பிடபடவில்லை என்றும் இது தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன் இது தொடர்பாக மேலதிக பரிசோதனைகளையும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.