தமது வாழ்விடத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போரிடுவதும் புனிதப் போராட்டமே!

கிழக்கு முஸ்லீம்களின் பூர்வீக காணிகளைபுனித பிரதேசமென்றும்,  வடக்கு முஸ்லீம்களின் பூர்வீக காணிகளைவனப்பிராந்தியம்என்றும் பிரகடனப் படுத்திமுஸ்லிம்களின் பாரம்பரிய காணிகள் பறிக்கப்பட்டுக் கொண்டு செல்கின்றது. 

ஏற்கனவே கிழக்கில் அறுபதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை இழந்த நிலையில்இம் முன்னெடுப்பு ஒரு திட்டமிடலின்மூலம்வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

இது பௌத்த தேசம்நாங்கள் விரும்பியதை செய்வோம் என்ற எண்ணத்தில் நல்லாட்சி ஜனாதிபதியும் நடந்து கொள்ளஆரம்பித்திருப்பதுஅவரைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட முஸ்லிம்களைபானையில் இருந்து அடுப்புக்குள் விழுந்த நிலைக்குத்தள்ளியிருக்கின்றது.

இந்நிலமைகளில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றனவா?

மக்கள் ஆணையைப் பெற்று அதிகாரங்களில் இருக்கும்  அனைத்து முஸ்லிம்  அரசியல் தலைமைகளும் குறைந்தபட்சம் அரசைஎச்சரிக்கும் முகமாக இந்நடவடிக்கைகளுக்குத் தமது எதிர்ப்பை பகிரங்கமாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்த  வேண்டும்.

இறக்காமம் பிரதேசத்தில் சிலை வைத்த விவகாரத்தை முறையோடு கையாளாத காரணங்கள் போன்றவற்றாலேயேஇத்தொடர்அநியாயங்கள் இடம் பெறுவதை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். 

புத்தர் சிலை வைப்பதால் முஸ்லிம்கள் மதம் மாறிவிடமாட்டார்கள் என்று கூறியவர்கள்பள்ளிவாசலையும் அதைச் சார்ந்தபிரதேசத்தையும்  பௌத்த புனித பிரதேசங்களாக பிரகடப்படுத்தினால்முஸ்லிம்கள் வீடுகளில் தொழுது கொள்வார்கள் என்றுசமாதானம் சொல்லிவிட்டுதமது பைகளை நிரப்புவதிலும் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதிலும் கவனமாய் இருப்பார்கள்.

ஆனால் இந்நிலை தொடருமாயின் நாடு முன்னிலும் பார்க்கப் பாரிய அழிவொன்றை மீண்டும் சந்திப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

தமது வாழ்விடத்தைப்பாதுகாத்துக் கொள்வதற்காகப் போரிடுவதும் புனிதப் போராட்டமே!

தனிநபர் அதிகாரத்துக்கும்ஊர்களின் அதிகாரங்களுக்கும் நீங்கள் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

முஸ்லிம் தேசியத்தின் இருப்பை உறுதிசெய்வதற்காக எமது பேராயுதமான பேரியக்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்.

உங்களால் இயலாது என்பதனாலேயே எங்களிடம் எமது கட்சியைத் தந்துவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள் என்று பலமுறைகூறியுள்ளோம்.

மீண்டும் அதையே கூறுகிறோம்ஏனைய தலைவர்களும் இவ்விடயத்தில் முஸ்லிம்களை கைவிடுவது போல் நடந்து கொள்ள முற்படுவதுதொடருமானால்அரசுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுமாற்போல் கிழக்கு வடக்கு மக்கள் ஒருங்கிணைந்த ஒருமாபெரும் ஆர்ப்பாட்டத்தைச் செய்து தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டி வரும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.

 

கிழக்கின் எழுச்சி