ஏறாவூர் இரட்டைப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

ஏறாவூர் இரட்டைப் படுகொலையுடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் மாவட்ட நீதவான் முஹம்மத் இஸ்மாயில் றிஷ்வி இன்று(30) பிறப்பித்துள்ளார்.

625_fotor

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையில் உள்ள வீட்டில் நித்திரை செய்துக்கொண்டிருந்த 56 வயதான தாயும் 32 வயதான மகளும் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலை சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அதே பிரதேசத்தை சேர்ந்த 06 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர். 

மேலும் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் இச்சந்தேகநபர்கள் மட்டக்களப்பு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.