நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை ஒரு மில்லியனாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

parliament srilanka

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை ஒரு மில்லியனாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த முன்மொழிவு நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு மூலம் அமைச்சரவையில் இன்று(29) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமே இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அமைச்சர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.