ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்ள 8 நிறுவனங்கள் முன்வந்துள்ளன!

srilankan_airlines[1]_Fotorஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்ள சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இவ்வாறு எட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இரான் விக்ரமரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.