தர்மசெனவுடன் மோதிக்கொண்ட பின்னர் ஒருநாள் போட்டியிலிருந்து கோஹ்லி ஓய்வு ?

download (3)_Fotorஐ.பி.எல். தொடரின் நேற்று முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் பெங்­களூர் அணித்­த­லைவர் விராட் கோஹ்லி, போட்­டி­யின்­போது நடு­வ­ராக கட­மை­யாற்­றிய குமார் தர்­ம­சே­ன­வுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டதையடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து விராட் கோஹ்லி ஓய்வு பெறுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இறுதிக் கட்­டத்தை நெருங்­கி­யுள்ள ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் சன் ரைசர்ஸ் ஐத­ராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்­களூர் அணிகள் மோதின.

இப்­போட்டி மழையால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் இந்தப் போட்டி 11 ஓவர்­க­ளாக குறைக்­கப்­பட்­டது. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஐத­ராபாத் அணி டேவிட் வோர்னர், ஹென்றிக்ஸ் ஆகி­யோரின் அரை­ச­தத்தால் 3 விக்­கெட்­டு­களை இழந்து 135 ஓட்­டங்கள் குவித்­தது.
போட்­டியின் 10ஆவது ஓவரில் மீண்டும் மழை பெய்ய தொடங்­கி­யது. கடைசி ஓவரில் மழையின் வேகம் அதி­க­ரித்த போதும் நடு­வர்கள் போட்­டியை நிறுத்­தாமல் தொடர்ந்து நடத்­தினர்.

இதனால் ஸ்டார்க் வீசிய 11ஆவது ஓவரில் இயொன் மோர்கன் அடித்த பந்தை களத்­த­டுப்பில் இருந்த பெங்­களூர் அணித்­த­லைவர் கோஹ்லி பிடிக்கத் தடு­மா­றினார். இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த கோஹ்லி, கடைசி ஓவர் முடிந்­ததும் நடுவர் தர்­ம­சே­னா­வுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார்.
இவரை தொடர்ந்து, பெங்­களூர் அணியின் விக்கெட் காப்­பா­ள­ரான தினேஷ் கார்த்­திக்கும் தர்­ம­சே­ன­வுடன் விவாதம் செய்தார். அப்­போது மற்­றொரு நடுவர் அனில் சௌத்­திரி இவர்­களை சமா­தானம் செய்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது. 

இச் சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுவெடுத்துக் கொண்டு, டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் களமிறங்கலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் நடு­வ­ர் குமார் தர்­ம­சே­ன­வுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடுபட்டதால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து கோஹ்லி நீக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.  

இதனால் டோனியின் ஓய்விற்கு பிறகு ஒருநாள் அணிக்கு தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லிக்கு தற்போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.