நாளை மகிந்த தலைமையில் போர் வெற்றி தின கொண்டாட்டம் !

images

நாட்டில் யுத்தம்  முடிவடைந்து  இன்றுடன் 6 வருடங்கள்  பூர்த்தியாகும்  நிலையில் அதனை நினைவு  கூர்ந்து ஜனாதிபதி   மைத்திரிபால  சிறிசேன தலைமையில் நாளை திங்கட்கிழமை  பிரிவினைவாதத்தை  தோற்கடித்த தினமாக மாத்தறையில் பிரதான  நிகழ்வு  நடத்தப்படவுள்ளது.  

அதே வேளை  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில்  கொழும்பில் யுத்த வெற்றி  நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
 மகிந்த  ராஜபக்ஷ தலைமையிலான யுத்த வெற்றி   நிகழ்வினை அவர் தரப்பு   ஆதரவாளர்கள்  ஏற்பாடு செய்துள்ளதுடன்  அந்த நிகழ்வு  நாளை திங்கட்கிழமை  மாலை 5 மணியளவில் கொழும்பு  விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில்  நடைபெறவுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ ஆதரவு தரப்பினரின்  தாய்  நாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் யுத்த வெற்றி   வீரர்கள் எனும்  தொனிப்பொருளில் இந்த  நிகழ்வு நடைபெறவுள்ளதாக  அவரின் ஊடகப் பிரிவை சேர்ந்த ஒருவர்  தெரிவித்தார்.
இந்த  நிகழ்வின் போது யுத்தத்தில் உயிர்நீத்த  இராணுவத்தினர்  நினைவு கூரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நிகழ்வில் உயிரிழந்த இராணுவத்தினரின் உறவினர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான அமைப்புக்களை சேர்ந்தவர்கள் மற்றும் எம்.பி.க்கள் பலரும்  கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாளை மாலை  சிவில் அமைப்புகள் சில ஒன்றிணைந்து பாராளுமன்றத்துக்கு முன்னாலுள்ள  இராணுவ நினைவுத்   தூபிக்குல் அருகில் நினைவஞ்சலி   நிகழ்வொன்றை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை யுத்த வெற்றி நினைவு  கொண்டாட்டத்துக்கு தடையேற்படுத்தும்  வகையில்   அரசாங்கம் செயற்படுமாயிருந்தால் பிரதேச ரீதியில் ஒன்றிணைந்து அந்த  நிகழ்வுகளை  நடத்துமாறு இராணுவத்தினரின் உறவினர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சகல வீடுகளிலும் தேசியக் கொடிகளை பறக்கவிடுமாறும் கேட்டுக்கொண்ருடிந்தமை குறிப்பிடத்தக்கது.