65 ஆவது மாநாட்டில் கலந்துக் கொள்வதா ? இல்லையா ? என்பது தொடர்பில் வெள்ளி இறுதி தீர்மானம்

ஸ்ரீ லங்கா சதந்திர கட்சியின் 65 ஆவது மாநாட்டில் கலந்துக் கொள்வது தொடர்பான இறுதி தீர்மானத்தை கூட்டு எதிர்கட்சி வெள்ளிக்கிழமை அறிவிக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியின் தீர்மானத்தை வெள்ளிக்கிழமை அறிவிப்பதே சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் உள்ள கூட்டு எதிர் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாநாட்டில் தாம் கலந்துக்கொள்ள போவதில்லை என முன்னரே அறிவித்துள்ளனர் என டலஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65ஆவது மாநாடு குருநாகல் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.