ஹைட் பார்க் மைதானத்தில் கூட்டத்தை நடாத்த தடை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை – நாமல்

அரசாங்கம் பாத யாத்திரைக்கு அஞ்சியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவையில் இருந்து ஆரம்பமான இன்றைய பாத யாத்திரையில் நேற்றைப் போன்றே மஹிந்த ராஜபக்ச பங்கேற்பதாக தென்படவில்லை.

நேற்றும் மஹிந்த ராஜபக்ச பாதயாத்திரையில் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அரசாங்கம் பாதயாத்திரைக்கு அஞ்சியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

யூனியன் பிளேஸில் அமைந்துள்ள ஹைட் பார்க் மைதானத்தில் இறுதிக் கூட்டத்தை நடாத்த தடை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்க செலவில் இந்த மைதானத்தில் குழிகள் தோண்டப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.