பசிலின் இரண்டு வீடுகளை பறிமுதல் செய்வது குறித்து சட்ட மா அதிபரிடம் ஆலோசனை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இரண்டு வீடுகளை பறிமுதல் செய்வது குறித்து சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. பசில் ராஜபக்ஸவிற்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பறிமுதல் செய்வது குறித்து இவ்வாறு ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

 
களனியில் அமைந்துள்ள வீடு ஒன்று உள்ளிட்ட இரண்டு வீடுகளை பசில் பதவியில் இருந்த போது சட்டவிரோதமான முறையில் கைப்பற்றிக் கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீடுகளையும் பறிமுதல் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

 
ராஜபக்ஸ பணம் வழங்கி இரண்டு வீடுகளையும் வேறு நபர்களைக் கொண்டு கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.