லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர் கைது

lasantha Wickrmatunge-poster1-e1377886727896_Fotor

 

 சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். 

இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜரான உதலாகம என்ற இந்த அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கொலையுடன் இந்த அதிகாரிக்கு தொடர்பு இருப்பதற்கான தெளிவான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் 20 இராணுவத்தினரடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.