மருதமுனை கவிஞர்கள் நௌபல்,ஜமீல் ஆகியோருக்கு இந்தியாவில் கவிஞர்கள் திருநாள் விருது!

 

பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனையைச் சேர்ந்த கவிஞர்களான எம்.எம்.நௌபல்,றகுமான் ஏ ஜமீல் ஆகியோருக்கு நாளை(13-07-2016)இந்தியாவில்’கவிஞர்கள் திருநாள்; விருது’ மற்றும் இந்தி ரூபா தலா 50 ஆயிரம் பணப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். எம்.எம்.நௌபலின் ‘மிதக்கும் கனவு’றகுமான் ஏ ஜமீலின் ‘தாளில் பறக்கும் தும்பி’ஆகிய கவிதை நூல்களுக்கே இந்த விரும் பணப்பரிசும் வழங்கப்படுகிறது.

2-PMMA CADER-12-07-2016

கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாளை யொட்டி கவிஞர்கள் திருநாள் நிகழ்வு இன்று(13-07-2016)மாலை மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.ஆர்.லெட்சுமணன் தலைமையில் நடைபெறுகிறது இந்த நிகழ்விலேயே இவர்களுக்கான ‘கவிஞர்கள் திருநாள்; விருது’ மற்றும் இந்தி ரூபா தலா 50 ஆயிரம் பணப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

இன்றைய நிகழ்வில் இயக்குணர் இமயம் பாரதிராஜா கவிஞனே கவிதையாகு என்ற தலைப்பிலும்,மரபின் மைந்தன் முத்தையா கவிதையே பாடலாக என்ற தலைப்பிலும்,பேராசிரியை விஜயசுந்தரி பாடலே கவிதையாக என்ற தலைப்பிலும் பேசவுள்ளனர்.கவிப்பேரரசு பத்மபூஷண் வைரமுத்து விருதுகள் மற்றும் கல்வி நிதி வழங்கி சிறப்புரையாற்றவுள்ளர்.