இலங்கையில் ரயில் பாதைககளை அமைக்க இந்தியா உதவி !

இலங்கையில் ரயில் பாதைககளை அமைப்பதற்கும், மீளமைப்பதற்கும் உதவிகளை வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. 

இந்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இலங்கையில் இருந்து புதுடில்லிக்கு சென்றுள்ள செய்தியாளர்கள் குழுவுடன் உரையாடும்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். 

இலங்கையின் வடமாகாணத்தில் ஏற்கனவே 250 கிலோமீற்றர் நீளமான தொடருந்து பாதையை இந்தியா அமைத்துக் கொடுத்துள்ளது. 

அத்துடன், கொழும்புக்கும் மாத்தறைக்கும் இடையிலான 114 கிலோமீற்றர் நீளமான பாதை மீளமைப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், தொடர்ந்தும் உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்றும் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.