ஒரு சாட்சி கையொப்பத்திற்கு ஒரு இலட்சம் பெற்றுக் கொண்ட ரஞ்சன்

திருமண நிகழ்வொன்றிற்காக சாட்சி கையொப்பம் இட்ட பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த திருமணத்தை நடாத்திய உரிமையாளரே இவ்வாறு பிரதி அமைச்சருக்கு பணம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பணமானது தனது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு அன்றி தனது அறக்கட்டளைக்காகவே பெற்றுக் கொண்டதாகவும், இதன் மூலம் ஏழைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.