எனக்கு நாய்களைக் கொல்ல வேண்டிய தேவை இல்லை – பைசர் முஸ்தபா

நான் மிருகங்கள் மீது அன்பு கொண்டவன். எனக்கு நாய்களைக் கொல்ல வேண்டிய தேவை இல்லை என மாகாணங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் இன்னும் 3 வாரங்களில் அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு அமைச்சரவையில் கோரியுள்ளதாகவும் அதற்கமைய கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் அமைச்சர் நாய்களை கொல்வதாக கதைகள் பரவும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் தான் நாய்களை ஒருபோதும் கொல்லமாட்டேன் என்றும் குறித்த கட்டாக்காலி நாய்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தைகள் மற்றும் வைத்தியசாலைகளை அண்மித்த பகுதிகளிலேயே நாய்கள் அதிகம் உலாவுவதாகவும், இந்த நாய்கள் தொடர்பில் அனைவரினதும் அபிப்பிராயங்களுக்கு அமைய தகுந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.