மலேசிய சர்வதேச பங்கோர் டயலொக் மாநாட்டுக்கு  அமைச்சர் றிசாத்துக்கு அழைப்பு

 

7M8A6204_Fotor

 

மனித சமுதாயத்தில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கும்,  பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது? என்பது தொடர்பிலும், நிலைபேறான அபிவிருத்தி சம்பந்தமாகவும், மலேசியாவில் எதிர்வரும் செப்டம்பர் 05 – 07 வரை நடைபெறவுள்ள, பங்கோர் டயலொக் (Pangkor Dialogue) சர்வதேச மாநாட்டில், பிரதம விருந்தினராகப் பங்கேற்குமாறு கோரி, மலேசிய ஏற்பாட்டாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை சந்தித்து அழைப்பு விடுத்தனர். 

 

7M8A6227_Fotor

 

கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இன்று (11/05/2016) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலேசிய – இலங்கை நட்புறவு, மலேசிய – இலங்கை வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தல் ஆகிய விடயங்களையும் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் தூதுக்குழுவினர் பரிமாறிக்கொண்டனர்.    

7M8A6219_Fotor