முரண்பாடுகளை உடனடியாக தீர்க்காவிடின் கட்சி பிளவுபடும் – தவிசாளர் பஷீர் எச்சரிக்கை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டுகள் உட­ன­டி­யாக பேசி தீர்க்­கப்­பட வேண்டும். செய­லாளர் நாயகம் ஹசன் அலி­யி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீள வழங்­கப்­பட வேண்டும்.

basheer cegu dawood slmc

இல்­லையேல் எதிர்­வரும் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் பாரிய சரி­வி­னையும் பிள­வி­னையும் எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்தார்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டுகள் தொடர்­பான தீர்­வுகள் பற்றி அவ­ரிடம் வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார். 

தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், கட்­சியின் உள்­ளக முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட்டு செய­லாளர் ஹசன் அலி­யி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீள வழங்­கப்­ப­டா­விட்டால் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் கட்சி பல சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும்

. தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­வதில் சிக்கல் நிலை தோன்­று­வ­துடன் கட்­சியின் வாக்கு வங்­கி­யிலும் சரிவு ஏற்­படும்.

கட்­சியில் எனக்கு எது­வித பிரச்­சி­னையும் இல்லை. நான் கட்­சியை நேசிப்­பவன். கட்­சியின் செய­லா­ள­ருக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கும் கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு மாறான தீர்­மா­னங்­க­ளுக்­கு­மா­கவே நான் குரல் கொடுக்­கிறேன்.

நான் நீதிக்­கா­கவே போரா­டு­கிறேன். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களால் கட்சி பிள­வு­படக்  கூடாது என்­ப­தற்­கா­கவே எழுந்து நிற்­கிறேன்.

கட்சி எதிர்­கால சவால்­களை எதிர்­கொள்­வ­தற்­காக கட்­சியை தூய்­மைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. கட்­சியின் உள்­ளக முரண்­பா­டு­களை தீர்த்து வைப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள மூவர் அடங்­கிய குழு ஹசன் அலி­யுடன் பல கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­தி­யுள்­ளது. 

கட்­சியின் அர­சியல் உயர்­பீட உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள மௌல­விகள் இரு­வரும் முதலில் உள்­வாங்­கப்­பட வேண்டும் என அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

செய­லாளர் ஹசன் அலிக்­கா­கவே அவ­ரது உரி­மை­க­ளுக்­கா­கவே நான் தொடர்ந்து போராடி வரு­கிறேன். 

இது­வன்றி எனக்கும் கட்­சிக்கும் இடையில் பிரச்சினைகள் இல்லை. ஹசன் அலியின் விவகாரம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இதில் இழுத்தடிப்பு இடம்பெறக்கூடாது. 

அப்படி இழுத்தடிப்புகள் இடம் பெற்றால் அது கட்சியின் எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும் என்றார்.    

 

எ.ஆர்.எ.பரீல்