தற்­போது தலை­வ­ரிடம் செய­லாளர் நீதி கேட்­ப­தனால் முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது : பசீர் சேகு­தாவூத்


மு.கா.வின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் கேசரிக்கு வழங்கிய பேட்டி 
நேர்காணல் : எம்.சி.நஜிமுதீன்

 

 முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் முரண்­பாடு எழு­வது இது முதற் தட­வை­யல்ல. பெருந்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மர­ணித்த பின்னர் பல பிரச்­சி­னைகள் எழுந்­தன. அப்­போ­தெல்லாம் நான் தலைவர் ரவூப் ஹக்­கீமின் பக்கம் சார்ந்­தி­ருந்தேன். ஏனெனில் அவரின் பக்கம் நியாயம் இருந்தது.

முன்­னைய முரண்­பா­டுகள், தலை­வ­ரிடம் பங்கு கேட்டு எழுந்­த­வை­க­ளாகும். ஆனால் தற்­போது தலை­வ­ரிடம் செய­லாளர் நீதி கேட்­ப­தனால் முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. எனவே இப்­பி­ரச்­சி­னை­யையும் பேச்­சு­வார்த்­தையின் மூலம் தீர்த்து கட்­சியை பாது­காக்க வேண்­டிய பொறுப்­புள்­ள­து.

basheer cegu dawood slmc

கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் என்ற ரீதியில் கட்­சியின் தற்­போதைய இழு­பறி நிலை­யா­னது கட்சி நட­வ­டிக்­கையில் எவ்­வ­கை­யி­லான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது?

பதில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்கள் விட­யத்தில் தீவி­ர­மாக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் ஒரு கட்சி. தற்­போ­தைய புதிய சூழலில் முஸ்­லிம்­களின் அர­சியல் நலன் தொடர்பில் ஒட்­டு­மொத்த ஒற்­றுமை பேணப்­பட வேண்­டிய நிலை உள்­ளது. எ­னினும் 2015ஆம் ஆண்டின் இறுதிப் பகு­தியில் நடை­பெற்ற கட்­சியின் கட்­டாய உயர்­பீடக் கூட்டத்­திலும் பேராளர் மாநாட்­டிலும் இடம்­பெற்ற சில சம்­ப­வங்­க­ளினால் கட்­சிக்குள் சிறி­ய­ள­வி­லான பூசல் ஏற்­பட்­டுள்­ளது.

அதிலும் செய­லாளர் நாய­கத்தின் அதி­காரக் குறைப்­பா­னது அப்­ப­த­வி­யினை வலு­வி­ழக்கச் செய்­துள்­ளது. மேலும் அத்­தீர்­மா­ன­மா­னது கட்­சியின் உயர்­பீ­டத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெறாமல் மேற்­கொள்­ளப்பட்­ட­தனால் கட்­சிக்குள் ஆதங்கம் உள்ள குழு­வொன்று உரு­வெ­டுத்­துள்­ளது. எனினும் அக்­குழு கட்சிச் செய­லா­ளரின் அதி­காரம் பற்றி கவனம் செலுத்­து­கி­றதே தவிர வேறு எவ­ரி­னதும் பத­விகள் பற்­றியும் அதி­காரம் பற்­றியும் விமர்­சனம் செய்­ய­வில்லை. இருந்­த­போ­திலும் பேச்­சு­வார்­த்­தையின் மூலம் அதனை முடி­வுக்குக் கொண்­டு­வந்து கட்சி நட­வ­டிக்­கை­களை சிறந்த முறையில் முன்­னெ­டுக்க முடியும் என்­கின்ற நம்­பிக்கை எனக்­குள்­ளது.

கேள்வி: செய­லாளர் நாய­கத்தின் அதி­காரக் குறைப்பின் பின்­னணி என்ன?

பதில்:செய­லாளரின் அதி­காரக் குறைப்­பா­னது, உயர்­பீ­டத்­திற்கு பகி­ரங்­க­மாக அறி­விக்­காது மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தனால் அதனை தெளி­வாகக் கூற முடி­யாது. எனினும் அதி­காரக்­கு­றைப்பின் பின்­னணி ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் வேறு­பட்­ட­தாக இருக்­கலாம். அதனை தலைவர் உட்­பட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் அனை­வரும் சுய­வி­சா­ரணை அடிப்­ப­டையில் பேசு­கின்ற போதுதான் கண்­டு­கொள்ள முடியும். அது மாத்­தி­ர­மல்­லாமல் அந்தப் பின்­ன­ணி­யையும் இல்­லாமல் செய்ய வேண்டும்.

கேள்வி: கட்­சியின் தீர்­மா­னங்கள் அனைத்தும் உயர்­பீ­டத்தின் ஒப்­பு­த­லுடன் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக பரவ­லாக பேசப்­ப­டு­கி­றது. எனினும் உயர்­பீ­டத்தின் அங்­கீ­கா­ர­மின்றி பொதுச்­செ­ய­லா­ளரின் அதி­காரம் குறைக்க்­கப்­பட்­டுள்­ள­தாக தாங்கள் கூறு­கி­றீர்­களே…

பதில்: இறு­தி­யாக நடை­பெற்ற கட்­டாய உச்­ச­பீடக் கூட்­டத்தில், பொதுச் செயலா­ளரின் அதி­கா­ரக்­கு­றைப்பு தொடர்பில் கூறப்­ப­ட­வில்லை. மாறாக பொதுச் செயலாளர் பதவி அப்­ப­டியே இருக்க மேலும் ஆறு புதிய செய­லாளர் பத­விகள் உரு­வாக்­கப்­பட்­டன. எனவே பொதுச் செய­லாளர் பத­வியை செல்­லாக்­கா­சாக்கும் உத்தி அங்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டதை சுட்­டிக்­காட்ட வேண்டும். குறித்த ஆறு செய­லா­ளர்­களில் ஒருவர் அர­சியல் அதி­யு­யர்­பீ­டத்தின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­படுவார் என்றும், அவர் அர­சியல் பத­விகள் எத­னையும் வகிக்­காத ஊதியம் பெறும் செய­லா­ள­ராக இருப்பார் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.எனவே அவர் பொதுச்­செ­ய­லாளர் நாய­கத்­திற்கு உத­வி­யாக நிய­மிக்­கப்­படும் செய­லா­ள­ரா­கவே நாம் அப்­போது நோக்­கினோம்.ஆனால் அவர் கட்­சிக்கே உரிய செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார் என்­பது பின்­னர்தான் தெரிய வந்­தது.

உச்­ச­பீடக் கூட்­டத்தின் பின்னர் அடுத்த நாள் நடை­பெற்ற பேராளர் மாநாட்டில் யாப்புத் திருத்தம் ஆங்­கி­லத்தில் வாசிக்­கப்­பட்­டது. அதன்­போது புதி­தாக நிய­மிக்­கப்­படும் கட்­சிக்­கான செய­லாளர் , உச்­ச­பீடச் செய­லா­ள­ரா­கவும் செயற்­ப­டுவார் என்றே வாசிக்­கப்­பட்­டது.. ஆனால் அந்த விடயம் தமிழில் வாசிக்­கப்­பட்­ட­போது உயர்­பீடச் செய­லாளர் தலை­வரால் நிய­மிக்­கப்­ப­டுவார், தேவை­யேற்­பட்டால் தலை­வரால் நீக்­கப்­படுவார் என்றே குறிப்­பி­டப்­பட்­டது.

எனினும் உச்­ச­பீடச் செய­லாளர் பத­வி­யா­னது கட்சிக் செய­லா­ள­ருக்­கு­ரிய கையெ­ழுத்­திடும் அதி­காரம் கொண்ட பதவி என்று எந்த இடத்­திலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. எனவே பொதுச் செய­லாளர் நாய­கத்தின் அதி­காரக் குறைப்பு விட­யத்தில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­களின் தந்­தி­ரோ­பாயம் பிர­யோ­கிக்­கப்­பட்­டி­ருப்­பது தெட்டத் தெளி­வா­கி­றது. மேலும் உச்­ச­பீ­டத்தில் எடுக்­கப்­ப­டாத தீர்­மானம் தேர்தல்கள் ஆணை­யா­ள­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

கேள்வி: பொதுச் செய­லா­ளரின் அதி­காரக் குறைப்பு எந்த வகையில் தாக்கம் செலுத்­து­கிறது?

பதில்: அதா­வது கட்­சியில் அதி­கா­ர­முள்ள பதவிகள் இரண்­டுதான் உள்­ளன. ஒன்று தலைவர், மற்­றையது செய­லாளர். செய­லாளர் ஆவ­ணங்­களில் இறுதிக் கையொப்­ப­மிடும் அதி­கா­ரத்­துடன் இருந்தார். அத­னால்தான் செய­லாளர் நாயகம் என்று குறிப்­பி­டப்­பட்­டது. தேர்தல்கள் ஆணை­யா­ள­ருடன் தொடர்பு கொள்­கின்ற, பாரா­ளு­மன்ற செய­லா­ள­ருடன் தொடர்­பு­கொள்­கின்ற, கட்­சியின் சார்­பாக ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­தி­டு­கின்ற அதி­காரம் கொண்­ட­வ­ரா­கத்தான் இவ்­வ­ளவு காலமும் ஹஸ­னலி இருந்தார். அந்த அதி­கா­ரம்தான் தற்­போது பிரித்து வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே இறுதிக் கையெ­ழுத்­திடும் அதி­காரம் அவரின் கண்ணை மறைத்­துக்­கொண்டு பறிக்­கப்­பட்­டுள்­ளது. அதுவே இன்று கட்­சிக்குள் விரி­சலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேலும் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள உச்­ச­பீடச் செய­லா­ளரை நிய­மிக்­கவும், நீக்­கு­வ­தற்­கு­மான அதி­காரம் தலை­வ­ருக்கு உள்­ளது. இவ்­வாறு செய்­தி­ருப்­பது அதி­காரம் கொண்ட இரு பத­வி­க­ளையும் தலை­வரே பிர­யோ­கிக்கும் தன்மையை ஏற்­ப­டுத்தும்.

கேள்வி: இழு­பறி நிலைக்கு பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காணப்­படும் எனக்­கு­றிப்­பிட்­டீர்கள். எனினும் ஏற்­க­னவே குறித்த விடயம் தொடர்பில் சம­ரசம் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­து­தானே…

பதில்: ஆம்… சம­ரசம் செய்­வ­தற்­கான பேச்­சு­வார்த்தை நடை­பெற்­ற­துதான். எனினும் அந்தப் பேச்­சு­வார்த்­தையில் இணக்கம் காணப்­பட்ட விட­யங்கள் பின்­பற்­றப்­ப­ட வில்லை.

கேள்வி: செய­லா­ளரின் அதி­காரக் குறைப்­பா­னது ஹஸ­ன­லியை கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்­டு­வ­தற்­கான அணு­கு­­மு­றை­யாக நோக்­க­லாமா?

பதில்: தலை­வ­ருக்கும் செய­லா­ள­ருக்­கு­மி­டையில் எவ்­வி­த­மான இடைவெளியும் கடந்த காலங்­களில் இருக்­க­வில்லை. செய­லாளர் தலை­வ­ருடன் மிகவும் நெருக்­க­மான உற­வைப்­பேணி வந்தார். அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாப­கர்­களில் ஒருவர். மேலும் கட்­சியின் உச்­ச­பீட உறுப்­பி­னர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் எவ­ரு­டனும் பிணக்­கு­களில் ஈடு­ப­டா­தவர். சகல விட­யங்­க­ளையும் அனு­ச­ரித்து நட­வ­டிக்கை எடுப்­பவர்.

அவர் எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் கட்­சிக்கு சேதங்­களை ஏற்­ப­டுத்­தியவர் அல்ல. ஆரம்பம் முதல் இன்­று­வரை கட்­சியின் ஆவ­ணங்­களை சேக­ரித்து வைத்­தி­ருக்கும் ஒருவர். சகல விட­யங்­க­ளிலும் பொறுமை காத்து காரி­யங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான காரணம் முஸ்லிம் காங்­கி­ரஸை அவர் தன்­னு­டைய கட்­சி­யாக நோக்­கு­வ­துதான். எனினும் அவ்­வா­ற­ான­வர்­களை ஓரங்­கட்ட வேண்­டிய அவ­சியம் இல்லை.

கேள்வி: இந்த முரண்­பாட்­டினால் தாங்­களும் பொதுச் செய­லாளர் ஹஸ­ன­லியும் இணைந்து புதிய அர­சியல் கட்­சி­யொன்றை ஆரம்­பிப்­ப­தற்­கான இர­க­சிய முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ள­தாக பர­வ­லாகப் பேசப்­ப­டு­கி­றதே…

பதில்: நிச்­ச­ய­மாக இல்லை. முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து விலகி மற்­று­மொரு கட்­சியை ஆரம்­பிக்க வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை. கட்­சிக்குள் ஏற்­படும் முரண்­பா­டு­களைத் தீர்ப்­ப­தற்­கான வழி புதிய கட்சி ஆரம்­பிப்­ப­தல்ல. பிரச்­சி­னை­களை உள்­ளக ரீதி­யா­கவே தீர்த்­துக்­கொள்ள வேண்டும். மேலும் முஸ்­லிம்­க­ளுக்கு பல முஸ்லிம் கட்­சிகள் உள்­ளன. இன்­னு­மின்னும் கட்­சி­களை ஆரம்­பிக்க வேண்­டிய தேவை இல்லை.நாமி­ரு­வரும் புதிய கட்சி ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக வெளி­யான தக­வ­லா­னது சூழ்ச்­சி­யாக இருக்­கலாம் என ஹஸ­னலி ஏற்­க­னவே தெரி­வித்­துள்ளார்.

கேள்வி: செய­லா­ளரின் அதி­காரக் குறைப்பு விவ­கா­ரத்தில் நீங்கள் செய­லாளர் நாய­கத்­திற்கு ஆத­ர­வாகச் செயற்­ப­டு­கி­றீர்­களா?

பதில்: எனக்கும் தலை­வ­ருக்­கு­மி­டையில் தனிப்­பட்ட முரண்­பாடு எதுவும் இல்லை. இருந்த போதிலும் பொதுச் செய­லா­ளரின் அதி­கா­ரங்கள் அவரின் கண்ணை மறைத்­துக்­கொண்டு பறிக்­கப்­பட்ட விட­யத்தில் ஹஸ­ன­லிக்கு ஆத­ர­வாகச் செயற்­ப­டு­கிறேன். ஏனெனில் அவரின் பக்கம் நியாயம் இருக்­கி­றது.

இவ்­வா­றான பிரச்­சி­னைகள் கட்­சிக்குள் எழு­வது இது முதற் தட­வை­யல்ல. பெருந்­த­லைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மர­ணித்த பின்னர் பல பிரச்­சி­னைகள் கட்­சிக்குள் எழுந்­தன. அப்­போ­தெல்லாம் நான் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் பக்கம் சார்ந்­தி­ருந்தேன். ஏனெனில் அப்­போ­தெல்லாம் அவரின் பக்கம் நியாயம் இருந்­தது.

தலைவர் எம்.எச்.எம். அஷ்­ரபின் மறை­வுக்குப் பின்னர் ஏற்­பட்ட ஹக்கீம் பேரியல், ஹக்கீம் – ஹாபிஸ் நஸீர், ஹக்கீம் – அதா­வுல்லாஹ், ஹக்கீம் – ஹிஸ்­புல்லாஹ், ஹக்கீம் – ரிஷாட் பதி­யுதீன், அமீ­ரலி, போன்­றோ­ருடன் முரண்­பா­டுகள் எழுந்­த­போது ரவூப் ஹக்­கீமின் பக்கம் நியாயம் இருந்­த­தனால் அவ­ரோடு இருந்து கட்­சியைக் காப்­பாற்­றினேன்.

முன்னர் ஏற்­பட்ட முரண்­பா­டுகள் தலை­வ­ரிடம் பங்கு கேட்டு எழுந்­த­வை­க­ளாகும். ஆனால், தற்­போது தலை­வ­ரிடம் செய­லாளர் நீதி கேட்கும் முரண்­பாடு எழுந்­துள்­ளது. எனவே, தற்­போது தலை­வ­ருக்கும் செய­லா­ள­ருக்­கு­மி­டையில் எழுந்­துள்ள பிரச்­சி­னையில் ஹஸ­ன­லியின் பக்கம் இருந்து கட்­சியை பாது­காப்­ப­தற்கு முன்­நிற்­கிறேன்.

கேள்வி: உச்­ச­பீடச் செய­லாளர் நிய­மிக்­கப்­பட்ட பின்னர் தேர்தல்கள் திணைக்­க­ளத்­தினால் அவ­ருக்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளதா?

பதில்: கட்­சியின் பேராளர் மாநாட்டில் எங்­க­ளு­டைய புதிய யாப்பு அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பின் தேர்தல்கள் ஆணை­யா­ள­ரினால் அழைக்­கப்­பட்ட எல்லா கூட்­டங்­க­ளுக்கும் இரு செய­லா­ளர்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் கட்­சியின் செய­லாளர் யார் என்­பது தொடர்பில் தேர்தல்கள் திணைக்­களம் இன்னும் தீர்­மா­னிக்­க­வில்லை என்­றுதான் நான் கரு­து­கிறேன்.

எனவே, இந்தப் பிணக்கு தொட­ரு­மாயின் கட்­சிக்கு செய­லாளர் இல்லை என்ற நிலையும் ஏற்­ப­டலாம். ஆகவே, இந்தப் பிரச்­சி­னையை விரை­வாகத் தீர்க்க வேண்டும். மேலும் தற்­போது உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு பற்­றிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­ன்றன. இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் கட்­சியில் இவ்­வா­றான இழு­பறி நிலை தொட­ரு­மாயின் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களில் பின்­ன­டை­வு­களை ஏற்­ப­டுத்தும்.

கேள்வி: உத்­தேச அர­சி­ய­ல­மைப்பில் முஸ்­லிம்­களின் தேவைகள் எவ்­வாறு அடை­யாளப் படுத்­தப்­பட வேண்டும் என நீங்கள் கரு­து­கி­றீர்கள்?

பதில்: புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பலரும் பல கருத்­துக்­களைக் கொண்­டுள்­ளனர். சில கட்­சி­களின் தலை­மைத்­து­வங்கள் தம்மை பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­கவே இதனை பயன்­ப­டுத்த முனை­கின்­றன.

எனினும் முஸ்லிம் காங்­கி­ரஸைப் பொறுத்த வரையில் தேர்தல் திருத்தச் சட்­டம்தான் பிர­தான இடம் வகிக்­கி­றது. தொகு­தி­வா­ரி­யான தேர்தல் முறை அறி­முகப்­ப­டுத்­தப்­பட்டால் முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் பேரம் பேசும் தன்மை அற்­றுப்போய் விடும். சலு­கைகள் வழங்­கு­வ­தாக வாக்­க­ளித்­தாலும் விகி­தா­சார முறை இல்­லாமல் செய்­யப்­ப­டும்­போது அது பாதிப்­பா­கத்தான் அமையும். அதனைத் தவிர்க்க முடி­யாது. எனவே, விகி­தா­சார தேர்தல் முறை மாற்­றப்­படக் கூடாது. இனப்­பி­ரச்சினை விட­யத்தில் எல்­லோ­ருக்கும் இருப்­பதைப் போன்று முஸ்­லிம்­க­ளுக்கும் ஒரு அலகு வேண்டும்.

கேள்வி: முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசி­யப்­பட்­டியல் விவ­காரம் இன்னும் தீர்க்­கப்­ப­டா­மைக்­கான காரணம் என்ன?

பதில்: காலத்­துக்கு காலம் அர­சியல் சூழ்­நி­லைகள் மாற்­றம­டை­கி­ன்றன. எனவே, தற்­போ­தைய நிலையில் தேசி­யப்­பட்­டியல் ஒரு விவ­கா­ரமே இல்லை. எனினும் அதனை சிலர் விவ­கா­ர­மாக்­கிக்­கொள்ள முயற்­சிக்­கி­ன்றனர். தற்­போது எழுந்­துள்ள உண்­மை­யான பிரச்­சி­னை­களை மறைப்­ப­தற்கு தேசி­யப்­பட்­டியல் விவ­காரம் இருப்­ப­தாக காட்­டிக்­கொள்­கின்­றனர்.

கேள்வி: தங்­க­ளுக்கும் தேசி­யப்­பட்­டியல் பிரதி­நிதித்­துவம் வழங்­கு­வ­தாக வாக்­க­ளிக்­கப்­பட்­ட­து­தானே….

பதில்: கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஓர் ஒப்­பு­த­லுடன் நான் போட்­டி­யி­ட­வில்லை. ஏனைய வேட்­பா­ளர்­களின் வேண்­டு­த­லுக்கும் கட்­சியின் முடி­வுக்கும் அமை­வா­கவே தேர்­தலில் நான் போட்­டி­யி­ட­வில்லை. எனினும் தேசியப் பட்­டியல் பிர­தி­நிதித்­துவம் வழங்­கு­வ­தாக வாக்­க­ளித்­தனர். தேர்­தலின் பின்னர் அது வழங்­கப்­ப­ட­வில்லை. நான் அது தொடர்பில் தலை­வ­ருக்கு கடிதம் ஒன்று மாத்­திரம் அனுப்­பினேன். அதற்­கான பதில் இது­வ­ரையில் கிடைக்கவில்லை. அத­னோடு அந்த விவ­கா­ரத்தை நான் கை விட்டேன்.

முஸ்லிம் காங்­கி­ரஸால் மூன்று முறை எனக்கு தேசி­யப்­பட்­டியல் பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆகை­யினால் இம்­முறை தேசி­யப்­பட்­டியல் வழங்கப் படா­மை­யிலும் நியாயம் இருப்­பதை உணர்ந்து அதனை கைவிட்டேன். ஆகவே, அவ்­விவ­கா­ரத்தை தொடர்ந்தும் பேசிக்­கொண்­டி­ருக்­காமல் அதனை அனை­வரும் மறந்து விடு­மாறு பணி­வாக வேண்­டுகோள் விடுக்­கிறேன்.

கேள்வி: கட்­சி­யி­லுள்ள பழை­ய­வர்கள் ஓரங்­கட்­டப்­பட்டு புதி­ய­வர்­களின் ஆதிக்கம் அதி­க­ரிப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே…

பதில்: அவ்­வாறு நடை­பெ­று­வதில் தவ­றில்லை. ஜன­நா­யக அடிப்­ப­டையில் அதனைச் செய்­யலாம். கட்­சிக்கு புதிய இரத்தம் பாய்ச்­சப்­ப­டு­வது அவ­சியம். எனினும் பாய்ச்­சப்­ப­டு­கின்ற இரத்தம் சுத்­த­மா­ன­தாக இருக்க வேண்டும். 

கேள்வி: கட்சி மறு­சீ­ர­மைக்­கப்­பட வேண்­டிய தேவை­யுள்­ளதா?

பதில்: தற்­போ­துள்ள முஸ்லிம் கட்­சி­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ்தான் சிறந்த கட்சி. அதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை. முஸ்லிம் காங்­கிரஸ் உயி­ருள்ள கட்­சிதான். மேலும் மறு­சீ­ர­மைப்பு செய்­வ­த­னூ­டாக இன்னும் உயிர்ப்­புள்ள கட்­சி­யாக ஆக்­கு­வ­தற்கு இட­முண்டு. முஸ்லிம் காங்­கிரஸ் மக்­களின் தேவை­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்­டது. ஏனைய முஸ்லிம் கட்­சிகள் தலை­வர்­களின் தேவை­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்­டவை..

கேள்வி: வடக்கு, கிழக்கு இணைப்பு விவ­காரம் பற்றி தற்­போது பேசப்­ப­டு­கி­றது. அது தொடர்பில் தங்­களின் நோக்கு என்ன?

பதில்: வடக்கு, கிழக்கு இணைப்பு விவ­காரம் உள்­ளிட்ட தமி­ழர்­களின் ஜன­நா­யக அடிப்­ப­டையில் கேட்­கின்ற அர­சியல் அபி­லா­ஷை­களை மறு­த­லிக்கும் உரிமை இன்­னு­மொரு சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இல்லை. அதே நேரம் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­ய­லகைக் கேட்­கின்ற உரிமை முஸ்லிம் தரப்­புக்கும் இருக்­கி­றது. 

எனவே முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை மறு­த­லிக்­கின்ற எவ்­வித உரி­மையும் இன்­னு­மொரு சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இல்லை. இருந்­த­போ­திலும் வட கிழக்கு என்­பது இப்­போ­தி­ருப்­பதைப் போலல்­லாது புதி­தாக இரண்டு மாகா­ணங்­க­ளாக எல்லை நிர்­ண­யிக்­கப்­பட வேண்டும். அதில் தமி­ழர்­களின் அபி­லா­ஷை­க­ளான வட கிழக்கு இணைந்­த­தா­கவும் அதில் தமிழர்களின் அபிலாஷைகளான வட கிழக்கு இணைந்ததாகவும் இருக்க வேண்டும். முஸ்லிம்களின் அபிலாஷைகளாக இருக்கின்ற தனியலகும் இருக்க வேண்டும். அதுவே தீர்வாக அமைவது சிறப்பானதாக இருக்கும்.

 
 நன்றி – வீரகேசரி