பாராளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ள பிரதமர்

ranil wickramasinghe_Fotor

 

யாழ். சாவகச்சேரி பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

அடுத்த வாரம் பாராளுமன்றில் இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நிதி அமைச்சின் புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

குறித்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், மீட்கப்பட்ட வெடிபொருட்களை இன்று நீதிமன்றுக்கு சமர்பிப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.