கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதில் சிரத்தை காட்டவில்லை !

கூட்டு எதிர்க்கட்சி புதிய  அரசியல் கட்சியொன்றை உருவாக்காது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொரரளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

vasu theva

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட்டு எதிர்க்டக்சியில் அங்கம் வகிக்கும் ஆறு கட்சிகளும் இணைந்து கூட்டாக தேர்தலில் போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதில் சிரத்தை காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் கட்சி அமைக்கப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் ஆதரவற்றவர்கள் கூட்டமைப்பை கைப்பற்றியுள்ளமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.