புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை : திலும் !

dilum amunugame

 

புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும் மஹிந்த தரப்பு புதிய அரசியல் கட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

 
புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
திலும் அமுனுகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய புதிய அரசியல் கட்சி அமைப்பது கட்டாயமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை கட்சி ஆதரவாளர்கள் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிதாக தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டமையின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்