பிரசன்ன ரணதுங்க எம்முடன் இணைந்தால் அமைப்பாளர் பதவியை அவரிடம் ஒப்படைக்க தயார் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தற்போதைய கட்சித் தலைமையை ஏற்று செயற்பட சகோதரர் பிரசன்ன ரணதுங்க தயாராக இருந்தால்,  மினுவாங்கொட தொகுதி அமைப்பாளர் பதவியை அவரிடம் ஒப்படைக்க தான் தயார் என ருவன் ரணதுங்க தெரிவித்தார்.
 Prasanna ranathunghe ruwan ranathunghe

இன்று புதிதாக கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட தொகுதி அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் சகோதரர் ருவன் ரணதுங்கவிடம் ஊடகங்கள் தனது சகோதரருக்கு பதவியை வழங்க தயாரா? என வினவிய போது அவர் இவ்வாறு பதிலளித்தார். 

இந்தப் பதவி தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவிடமே காணப்பட்டது. 

இவர் தற்போது மஹிந்த சார்ப்பு குழுவில் காணப்படுவதனால், இவரது சகோதரர் ருவன் ரணதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.