முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தவும் , சந்திரிகாவும் இன்னும் அதிகார மோகத்தில் உள்ளனர் !

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும் சந்திரிகா குமாரதுங்கவும் இன்னும் அதிகார மோகத்தில் உள்ளனர் என்று ராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
dilan perera

தமது அதிகாரத்தை குறைப்பது எவ்வாறு என்பதை ஜனாதிபதி மைத்திரிபால உணர்த்துக்கின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் அதிகாரமோகத்தில் உள்ளனர் என்று பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இரண்டு தடவைகளாக ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா, கம்பஹா மாவட்ட இணைப்புக்குழு தலைவராகவும் செயற்பட்டார். அத்துடன் கிடைத்தால், கம்பஹா மாநகரசபையின் மேயராகவும் அவர் செயற்பட தயாராகவுள்ளார்.

அதேபோன்று இரண்டு தடவைகளாக ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

எனவே இவர்கள் இருவரும் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.