புதிய அமைப்பாளர்கள் நியமனம் !

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 26 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களின் நியமனக் கடிதங்களை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக் கொண்டனர்.

slfp

 

இதற்கமைய கொலன்னாவை தொகுதி ஒருங்கினைப்பாளராக பிரசன்ன சோளங்கஆராய்ச்சியும், மஹரகம பிரதேச ஒருங்கினைப்பாளாராக இசுர தேவப்பிரியவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தெஹிவளை,கல்கிஸ்ஸ பிரதேச அமைப்பாளராக கீர்த்தி உடவத்தையும், தெல்தெனிய தொகுதி அமைப்பாளராக அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்கவும், மீரிகம தொகுதி அமைப்பாளராக ருவன் குணதுங்கவும் ஜனாதிபதியினால் இன்று நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.