கொடூரமான தண்டனைகள் குறித்த ஐ. நா. அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கை வரலாம்!

Unknown

சித்திரவதைகள் மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள், கொடூரமான தண்டனைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஜூவான் மென்டிஸ் இந்த வருடம் இலங்கை வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

ஜூவான் மென்டிஸ் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என, சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், சுயாதீன நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மொனிகா பின்டோவும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.