பதவி விலகுமாறு இரண்டு ஆளுனர்களிடம் கோரிக்கை !

பதவி விலகுமாறு இரண்டு ஆளுனர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நியமிக்கப்பட்ட இரண்டு ஆளுனர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆளுனர்களும் நோய்வாய்ப்பட்டிருக்கின்றார்கள். இதனால் அவர்களை பதவியை ராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் நாட்களில் புதிதாக இரண்டு ஆளுனர்கள் நியமிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதற்கு முன்னதாக வட மாகாண ஆளுனராக கடமையாற்றி வந்த ஜீ.எஸ். பலிஹக்கார தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே அந்தப் பதவிக்காக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.