வேயாங்கொட முதல் பாணந்துறை வரையான மின்சார ரயில் விரைவில்…!

hitachi-super-express-train-large-537x310இந்த வருடத்துக்குள் வேயாங்கொட முதல் பாணந்துறை வரையில் மின்சார ரயில் பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மருதானையிலிருந்து ராகம வரையில் நான்காவது ரயில் பாதையொன்றை நிறுவுவதற்கும் அவதானம் செலுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான மதிப்பிடும் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே  திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.