தோனி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ?

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி டாக்கா சென்றுள்ளது. 

images

முதல் லீக் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா. 4–வது ‘லீக்’ போட்டி இன்று மிர்பூரில் நடக்கிறது. இதில் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டியை இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை டாக்காவில் இந்திய அணி வலைப் பயிற்சியில் ஈடுப்பட்டது. முதுகு பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பால் அவதிப்பட்டு வரும் கேப்டன் தோனி பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால் இன்றைய போட்டியில் தோனி விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ராவும் பயிற்சியில் கலந்துக்கொள்ளவில்லை.