நல்லிணக்க முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் : மங்களவிடம் ஜோன் கெரி

john-kerry
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் சிரத்தையுடன் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிடம் அந்நாட்டு இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில் நல்லிணக்க முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அவர் மங்கள சமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நல்லிணக்க முயற்சிகள் இலங்கையின் சமாதானத்துக்கு அவசியமானவை என்றும் கெரி குறிப்பிட்டுள்ளார்