பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிரதேச அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம்!

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிரதேச அபிவிருத்தி அமைச்சராக சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதேச அபிவிருத்தி அமைச்சராக (அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 
Unknown

இன்று பிற்பகல் 01.30 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

அண்மையில் மரணமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர், எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு பொன்சேகா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.