மஹிந்த தலைமையிலான புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவதில் எவ்வித மறைவுகளும் இல்லை: திலும் அமுனுகம

mahinda
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு முன்னணி நிச்சயமாக புதிய கட்சி ஒன்றை அமைக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் (23) நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவதில் எவ்வித மறைவுகளும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபை தேர்தலை அரசாங்கம் அறிவித்தும் புதிய கட்சி தமது பெயரை அறிவிக்கும் என்றும்  தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய கட்சிக்கு தலைவராக மஹிந்த ராஜபக்ச அறிவிக்கப்படுவார் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.