ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் !

FILE IMAGE

thero janasera galagoda_1

 

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

அவர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு சரீரப்பணையில் அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிய வருகின்றது .

பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளை, சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.