மங்கள சமரவீரவின் விமர்சனம் காரணமாக தனித்தனியாக நடைபெறும் ஆளுங்கட்சி கூட்டம் !

mangala samaraweera
  சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மங்கள சமரவீரவின் விமர்சனம் காரணமாக ஆளுங்கட்சிக் கூட்டம் இன்று தனித்தனியாக நடைபெறவுள்ளது.ஆளுங்கட்சியின் ஒரு பங்காளியான ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சுமார் 11.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.இதற்கிடையே தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

 

இதற்கு முன்னர் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கலந்து கொண்ட நிலையில் நடைபெற்றது.எனினும் கடந்த முறை நடந்த ஆளுங்கட்சிக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மங்கள சமரவீரவின் விமர்சனம் காரணமாகவே இம்முறை இரண்டு கட்சிகளும் தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.