நிந்தவூரில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை !

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 

 

 நிந்தவூர்-9ம் பிரிவில் வசிக்கும் சுஹார்த்தீன் முஹம்மட் அக்றம் 30 வயது மதிக்கத்தக்க இளம் குடும்பஸ்தர் இன்று (22) நள்ளிரவு தனது இல்லத்தின் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

rope  suicide_Fotor

மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த நபர் அவரின் சொந்த ஊரில் ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனான நிலையில் இரண்டாவது முறையாக இவர் நிந்தவூரில் திருமணம் முடித்து இரண்டு மாத காலங்கள் கடந்துள்ள நிலையிலேயே இந்த தற்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை இந்தத் தற்கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று காலை (22) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி ஏ.எச். அரூஸ் அவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்றப் ஞாபகர்தத வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்த தற்கொலை சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.