பாகிஸ்தானில் வீட்டின் மீது இடிதாக்கி 7 பேர் பலி !

LIGHTENING_Fotor

 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஷாப் மாவட்டத்தில் உள்ள புரானா சவுக் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு பலத்த இடி, மின்னலுடன் விடாமல் மழை பெய்தது.

அப்போது, பயங்கர சப்தத்துடன் அப்பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தை இடி தாக்கியது. இடி தாக்கிய வேகத்தில் அந்த கட்டிடம் இடிந்து பூமிக்குள் உள்வாங்கியது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு குழந்தைகள், நான்கு பெண்கள் மற்றும் அதே கட்டிடத்தின் வேறு பகுதியில் வசித்துவந்த மேலும் ஒருவர் என ஏழு பேர் பலியாகினர், ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.