இலங்கைக்கு தற்போது உலகில் எதிரி நாடுகள் கிடையாது : ஜனாதிபதி !

maiththiri

 

இலங்கைக்கு தற்போது உலகில் எதிரி நாடுகள் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த நிலைமை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒஸ்ட்ரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கான விஜயங்கள் பெரும் வெற்றியளித்துள்ளதாகவும் பல்வேறு நன்மைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ரீதியாக பல நன்மைகள் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாகவும் பாரியளவில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நாடும் எந்தவொரு அமைப்பும் இலங்கைக்கு எதிரியாக செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 19ம் திருத்தச் சட்டம் பல்வேறு நன்மைகளை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.