ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டாம் !

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொண்டு வந்த யோசனை எதிர்வரும் செவ்வாய் கிழமை விவாதத்திற்கு எடுக்கப்படவிருப்பதால், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ranil wickramasinghe_Fotor
இதனால், அடுத்த வாரம் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டாம் என பிரதமர் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.