மெஸ்சி 300 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்!

 

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

Unknown

ஸ்பெயினின் லா லிகா போட்டியில் ஸ்போர்ட்டின் கிஜோன் அணிக்கு எதிராக அவர் 2 கோல்கள் அடித்தார். இதன் மூலம் மெஸ்சி 300 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். அவர் 334 ஆட்டத்தில் விளையாடி 301 கோல்கள் அடித்துள்ளார்.

லா லிகா போட்டியில் 300 கோல்கள் அடித்த முதல் வீரர் மெஸ்சி ஆவார். அவருக்கு அடுத்தப்படியாக மறைந்த ஸ்பெயின் வீரர் டெல்மோ ஜாரா 251 கோல்களும், கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) 246 கோல்களும் அடித்துள்ளனர்.