இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜெப்ரி அழகரட்ணம் தெரிவு !

President’s-Counsel-Geoffrey-Alagaratnam
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக சட்டத்தரணி அமல் ரந்தெனிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2016-2017 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளரை தெரிவு செய்யும் தேர்தல் கொழும்பு மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளாக சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன ஆகியோர் கடமையாற்றியதுடன் அவர்களின் கண்காணிப்பில் தேர்தல் நடைபெற்றது. 

செயலாளர் பதவிக்கு, சட்டத்தரணிகள் அமல் ரந்தெனிய, செனரத் ஜயசுந்தர, எராஜ் டி. சில்வா ஆகியோர் போட்டியிட்டனர். அவர்களில் அமல் ரந்தெனிய தெரிவு செய்யப்பட்டார். இதற்கு முன்னர் சட்டத்தரணி அஜித் பத்திரண செயலாளராக பதவி வகித்தார். 

இதனிடையே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 22 வது தலைவராக ஜெப்ரி அழகரட்ணம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். 

இலங்கை முழுவதும் உள்ள 77 நீதிமன்றங்களில் நேற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றதாக சங்கத்தின் முன்னாள் செயலாளர் அஜித் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.