உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்த முடியாது : லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன !

mahintha abayawarden

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்த முடியாது என, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் உரிய முறையில் நிறைவடையவில்லை என்பதாலேயே இவ்வருடம் தேர்தலை நடத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹூசைன் கருத்து தொடர்பில் பொது எதிரணியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் எனவும், ஹூசைன் கூறியது யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் உள்நாட்டுப் பொறிமுறை மூலம் அதற்கு பதில் தேட வேண்டும் என்றே எனவும், லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.