இலங்கை மீன் வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடுகின்றனர் – ஜே.வி.பி. !

anura kumara dissaayake

 

இலங்கை மீன் வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடி வருவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் இயற்கை மீன் வளத்தை அபகரித்துச் செல்வதுடன் அத்து மீறி கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது இலங்கையின் இறைமையை மீறும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.இறைமை பற்றி பேசும் போது நாம் நாட்டின் நிலம் பற்றியே பேசுவதாகவும் கடல் அத்து மீறல்கள் பற்றி கவனம் செலுத்தப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாரத்தில் மூன்று நாட்களே இலங்கை மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் ஏனைய நாட்களில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமன்றி, இயற்கை கடல் வளமும் அழிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.