கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்துள்ள பசில் !

basil

கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு தம்மை கைது செய்வதனை தடுக்கும் நோக்கில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நிதிச் சலவையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி அதன் அடிப்படையில் தம்மை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர், சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.