ஊடகவியலாளர்கள் அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளை விட என்னை சுற்றி வரத் தொடங்கிவிட்டார்கள் !

Mahinda-Rajapaksa3-640x400
 
நல்லாட்சி அரசாங்கம் ஊடகவியலாளர்களை முற்றாக மறந்து செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை களுத்துறையில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார்.

அவரது வருகை குறித்து கேள்விப்பட்ட ஏராளம் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் திருமண மண்டபத்தின் வெளியே குழுமி நின்றிருந்தனர். திருமண வைபவம் முடிவுற்றவுடன் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் தற்போதைய அரசியல் நிலை குறித்து கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களின் உதவியுடன் அதிகாரத்துக்கு வந்த ஒரு அரசாங்கமாகும். நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களை அதிகாரத்துக்கு கொண்டுவர உதவிய ஊடகவியலாளர்களை முற்றாக மறந்துவிட்டார்கள்.

இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளை விட என்னை சுற்றி வரத் தொடங்கிவிட்டார்கள். அது எனக்கு ஒரு வகையில் தொல்லையாகவும் அமைந்துள்ளது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.