மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்த தீர்மானம் !

mahinda
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கட்சியின் ஆலோசகருமான மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழுவினர் 30 பாராளுமன்ற உறுப்பினர்ளுக்கு எதிராக விசாரணைகளை நடாத்த தீர்மானித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கட்சியின் மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.கட்சியில் எவ்வாறான பதவி வகித்தாலும் ஒழுக்க விதிகளை மீறினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளது.
உள்ளக ஒழுக்கம் அரசியல் கட்சியொன்றுக்கு மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது.கட்சியின் ஒழுக்க விதிகளை நிலைநாட்டுவதே தமது பிரதான இலக்கு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சிக்கும் கட்சியின் தலைமைத்துவத்திற்கும் எதிராக விமர்சனம் செய்து வரும அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.