கொலன்னாவை, கண்டி, கொழும்பு பிரதேசங்கள் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவுத்தளம் : UN !

isis-flag
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதம் வேகமாக பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ஐஎஸ் தீவிரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை நேற்று அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இனால் வெளியிடப்பட்டது. 

குறித்த அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவுத் தளம் வேகமாக வியாபித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இலங்கையில் கொலன்னாவை, கண்டி, கொழும்பு பிரதேசங்கள் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவுத் தளமாக மாற்றம் பெற்றுவருவதாகவும் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது