பொன்சேகாவின் நியமனமானது மனித உரிமைகளில் ஈடுபட்ட இராணுவ தலைவர்களை பாதுகாக்கும் செயற்பாடு !

Brad_ fonseka
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமையானது போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நேர்மாறான விடயம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவின் நியமனமானது இலங்கை அரசாங்கம் பாரிய மனித உரிமைகளில் ஈடுபட்ட இராணுவ தலைவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கு சமிக்ஞை என்று கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அரசாங்கம் இலங்கை மக்களினதும் ஐக்கிய நாடுகளினதும் நியாயமான கோரிக்கைகளை வெள்ளையடிப்பு செய்துவிடக்கூடாது என்று அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் நியமனமானது போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் நியாயத்தை பெற்றுத்தரும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நியாயம் கிடைக்கும் என்று நம்பியிருந்த உலக தலைவர்களுக்கு வழங்கியுள்ள அவதானமிக்க செய்தியாகும் என்றும் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.